காலம் எல்லாம் கண்மணிபோல் காத்த என் இறைவா – உமக்கு நன்றி
நடந்து வந்த பாதைகள் எப்படி இருப்பினும் தூக்கி சுமந்த இறைவா – உமக்கு நன்றி
கலங்கின நேரங்களில் என் கண்ணீரை துடைத்தவரே – உமக்கு நன்றி
(சூழ்நிலைகளை பார்த்து) நடுங்கின நேரங்களில் நடுவில் நின்று காத்தவரே – உமக்கு நன்றி
மரண இருளின் பள்ளத்தாக்கிலும் என்னோடே கூட இருந்தீரே – உமக்கு நன்றி
புல்லுள்ள இடங்களில் மேய்த்து, அமர்ந்த தண்ணீர்கள் அண்டையில் என்னைக் கொண்டுபோய் விட்டீரே – உமக்கு நன்றி
எந்நாளும், என் இறைவா உம் துணையின்றி எனக்கு வேறொன்றுமில்லையே.
உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் (ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து) உங்களுடனேகூட இருக்கிறேன் (மத் 28:20)
கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினுடைய கிருபையும், தேவனுடைய அன்பும், பரிசுத்த ஆவியினுடைய ஐக்கியமும், உங்கள் அனைவரோடுங்கூட இருப்பதாக. ஆமென். (II கொ 13:14)
