இழப்புகளின் மத்தியில்

இழப்புகள் என்பது நம்மால் தாங்கிக்கொள்ள முடியாத ஒன்றாகும். அதிலும், யோபுவை போல ஒன்றன்பின் ஒன்றாக ஒவ்வொரு காரியத்திலும் இழப்புக்கள் ஏற்படும் பொழுதும், அடி மேல் அடி விழும் பொழுதும் நாம் நிலைகொலைந்து போகிறோம்.  யோபுவும், அப்படியே நிலைகொலைந்தே சாம்பலில் உட்கார்ந்தார் (யோபு 2 :8). அவருடைய பல கேள்விகள் எனக்கு ஏன் இந்த துன்பம் என்று கேட்பதாகவே இருந்தது.  நாமும் அப்படியே பல வேளைகளில் தேவனிடத்தில் கேட்கிறோம்.

ஆனால்,  யோபுவுக்கு எப்படி அதற்கு பதில் வரவில்லையோ, நமக்கும் தேவன் அநேக நேரங்களில் ஏன் என்ற நமது கேள்விக்கு பதில் அளிப்பதில்லை.  ஏனெனில், திரை மறைவில் தேவனுக்கும், சாத்தானுக்கும் இடையே நடந்ததை  யோபு ஒருபோதும் அறியவில்லை.  தேவனும் அதை அவருக்கு அறிவிக்கவில்லை.

ஆனால், வேளை வந்தபொழுது தேவன் தமது வல்லமையை யோபுவின் வாழ்க்கையில் வெளிப்படுத்தினார்.  சாத்தான் யோபுவின் வாழ்க்கையில் எல்லாவற்றையும் ஒரே நாளில் எடுத்துக்கொண்டான்.  ஆனால் தேவன் அவை ஒவ்வொன்றையும் அவருக்கு இரட்டதனையாய் திருப்பித்தந்தார்.  ஏனெனில்,  யோபுவுக்கு ஒரு நிச்சயம் இருந்தது, அது “அவர் என்னை கொன்றுபோட்டாலும், அவர் மேல் நம்பிக்கையாய் இருப்பேன்” (யோபு 13 :15) என்பதே.  ஆம், அவர் வாழ்க்கையீல் இழக்க அவர் உயீரை தவிர வேறெதுவும் இல்லை, அவர், மனைவிகூட “தேவனைத் தூஷித்து ஜிவனை விடும்” (யோபு 2 :9) என்று கூறிவிட்டாள்.  ஆனால், அந்த சூழ்நிலையில் மத்தியிலும் அவர் தமது நம்பிக்கையை விடவில்லை. ஏனெனில், “என் மிட்பர் உயிரோடிருக்கிறார்” (யோபு 19 :25) என்பதை அவர் அறிந்திருந்தார்.  அதுமாத்திரமல்ல, நித்திய வாழ்வைக்குறித்தும் அவருக்கு  நம்பிக்கை இருந்தது (யோபு 19 :26,27).

அதனால்தான், தான் இவ்வுலகத்தில் எல்லாவற்றையும் இழந்த பின்பும், தான் நத்திய வாழ்வை இழந்து போகமாட்டேன் என்ற நம்பிக்கை அவருக்குள் இருந்தது.  எனவே, தேவன் இவ்வுலகத்திற்குரியவைகளையல்ல, மேலானவைகளையே தேடின யோபுவிற்கு, ஆவிக்குரிய ஆசிர்வாதங்களையும், பூமிக்குரிய நன்மைகளையும் அளவில்லாமல் அளித்தார்.  இறுதியில் யோபு ஒன்றையும் இழந்து போகவில்லை, தோற்றுபோனவன் பிசாசே.  எனவே, நாமும் தேவனை மேலானவைகளுக்காக தேடுவோம்.  அப்பொழுது நமக்கு சகலமும், சம்பூரணமாய் கூடக் கொடுக்கப்படும்.நாம் ஆசிர்வதிக்கப்பட்டவர்களாய் மட்டுமல்ல, பிறருக்கு ஆசிர்வாதமாயும் இருப்போம்.

இவற்றை நான் வேத வசன போதனையாக மட்டுமல்ல, வாழ்வில் அனுபவிக்கிறவனாகவே எழுதுகிறேன்.  எனவே, கிறிஸ்துவுக்குள்ளான சகோதர, சகோதிரிகளே நீங்களும் இப்படியே கர்த்தருக்குள் நிலைதிருப்பீர்களாக.  கிறிஸ்துவை அறியாதவர்களாய், இப்படிபட்ட நம்பிக்கை இல்லாமல் வாழ்வில் தவித்துகொண்டிருக்கும் ஒவ்வொருவருக்கும்  கிறிஸ்துவை அறிவிப்போம்.  அவர்களையும் துன்ப இருளில் இருந்து விடுதலை செய்வோம். மாரநாதா! அல்லேலுயா, ஆமென்.

Leave a Reply