புது வாழ்வு பிறந்தது

பாவ சேற்றில் வீழ்ந்து கிடந்தேன்

சோதனை புயலில் சிக்கி தவித்தேன்

வேதனையில் மூழ்கி போனேன்

வியாதி படுக்கையில் துடித்து அழுதேன்

ஏளனங்களால் ஏங்கி தவித்தேன்

பாதை தெரியா இருளில் திரிந்தேன்

வாழ்வின் விடை அறியா மெளனமானேன்

என்னை தேடி வந்தீரையா

புது வாழ்வு தந்தீரையா

பாவ கறை நீக்கி

வியாதி படுக்கை மாற்றி

புதிய பாதை காட்டி

விடை தந்தீரையா

என் வாழ்வின் வினை தீர்த்திரே ஐயா

விண்ணில் இருந்து (வந்து)

மண்ணில் உதித்து

மண்ணான என்னை

விண்ணில் சேர்த்தீரே ஐயா

பிறந்தது புது வாழ்வு  (கிறிஸ்து)

என்னில்!

அனைவருக்கும் இனிய கிறிஸ்து பிறப்பு மற்றும் புத்தாண்டு  நல் வாழ்த்துக்கள்.