இயேசு பிறந்தார்

இயேசு பிறந்தார் நம் இயேசு பிறந்தார்

மண்ணான மனிதனை மகிமையில் சேர்கவே

நம் இயேசு பிறந்தார்

பரதேசியான (இவ்வுலகில்) என்னையும் பரலோகம் சேர்கவே

நம் இயேசு பிறந்தார்

உன்னதத்திலிருந்து தோன்றிய அருணோதயமாய்

நம் இயேசு பிறந்தார்

அனைவருக்கும் கிறிஸ்து பிறப்பு நல்வாழ்த்துக்கள்

இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள் 2022

நட்சத்திரமே

என் வாழ்வின் ஒளியை (இயேசுவை)

வழிகாட்ட வந்த நட்சத்திரமே !

கிறிஸ்துவாம், பிரகாசமுள்ள விடிவெள்ளி நட்சத்திரத்திடத்திற்கு

வழிநடத்திய நட்சத்திரமே !

அவரிடத்தில் (கிறிஸ்துவினிடத்தில்) ஒளியை பெற்று

அவரையே பிரதிபலிக்கும் நட்சத்திரமே !

உன்னை போல் நானும் மாற ஆசையே

கிறிஸ்துவினிடத்தில் அநேகரை வழிநடத்த.

அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்.

பாலகன் பிறந்தார்

பாலகன் பிறந்தார்  என்னும் இத்தியானம்  கிறிஸ்து பிறப்பு பற்றி ஏசாயா 9:6 ஆம் வசனத்தில் காணப்படும் காரியங்களை சுருக்கமாக தியானிக்கிறது.

PDF வடிவில் படிக்க இங்கே கிளிக்  செய்யவும்.

புது வாழ்வு பிறந்தது

பாவ சேற்றில் வீழ்ந்து கிடந்தேன்

சோதனை புயலில் சிக்கி தவித்தேன்

வேதனையில் மூழ்கி போனேன்

வியாதி படுக்கையில் துடித்து அழுதேன்

ஏளனங்களால் ஏங்கி தவித்தேன்

பாதை தெரியா இருளில் திரிந்தேன்

வாழ்வின் விடை அறியா மெளனமானேன்

என்னை தேடி வந்தீரையா

புது வாழ்வு தந்தீரையா

பாவ கறை நீக்கி

வியாதி படுக்கை மாற்றி

புதிய பாதை காட்டி

விடை தந்தீரையா

என் வாழ்வின் வினை தீர்த்திரே ஐயா

விண்ணில் இருந்து (வந்து)

மண்ணில் உதித்து

மண்ணான என்னை

விண்ணில் சேர்த்தீரே ஐயா

பிறந்தது புது வாழ்வு  (கிறிஸ்து)

என்னில்!

அனைவருக்கும் இனிய கிறிஸ்து பிறப்பு மற்றும் புத்தாண்டு  நல் வாழ்த்துக்கள்.

கிறிஸ்து பிறப்பு நல்வாழ்த்துக்கள்

nativity-baby-jesus-christmas-2008-christmas-2806967-1000-5581

பரிசுத்த வேதாகமத்தில் கிறிஸ்து பிறப்பு பற்றி உள்ள சத்தியங்கள்:

ஆதி 3:15 உனக்கும் ஸ்திரீக்கும், உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகை உண்டாக்குவேன்; அவர் உன் தலையை நசுக்குவார், நீ அவர் குதிங்காலை நசுக்குவாய் என்றார்.

ஏசா 7:14 ஆதலால் ஆண்டவர் தாமே உங்களுக்கு ஒரு அடையாளத்தைக் கொடுப்பார்; இதோ, ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள், அவருக்கு இம்மானுவேல் என்று பேரிடுவாள்.

ஏசா 9:6 நமக்கு ஒரு பாலகன் பிறந்தார்; நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார்; கர்த்தத்துவம் அவர் தோளின்மேலிருக்கும்; அவர் நாமம் அதிசயமானவர், ஆலோசனைக்கர்த்தா, வல்லமையுள்ள தேவன், நித்திய பிதா, சமாதானப்பிரபு என்னப்படும்.

ஏசா 11:1-5

ஈசாயென்னும் அடிமரத்திலிருந்து ஒரு துளிர் தோன்றி, அவன் வேர்களிலிருந்து ஒரு கிளை எழும்பிச் செழிக்கும்.
ஞானத்தையும் உணர்வையும் அருளும் ஆவியும், ஆலோசனையையும் பெலனையும் அருளும் ஆவியும், அறிவையும் கர்த்தருக்குப் பயப்படுகிற பயத்தையும் அருளும் ஆவியுமாகிய கர்த்தருடைய ஆவியானவர் அவர்மேல் தங்கியிருப்பார்.
கர்த்தருக்குப் பயப்படுதல் அவருக்கு உகந்த வாசனையாயிருக்கும்; அவர் தமது கண் கண்டபடி நியாயந்தீர்க்காமலும், தமது காது கேட்டபடி தீர்ப்புச்செய்யாமலும்,
நீதியின்படி ஏழைகளை நியாயம் விசாரித்து, யதார்த்தத்தின்படி பூமியிலுள்ள சிறுமையானவர்களுக்குத் தீர்ப்புச்செய்து, பூமியைத் தமது வாக்கின் கோலால் அடித்து, தமது வாயின் சுவாசத்தால் துன்மார்க்கரைச் சங்கரிப்பார்.
நீதி அவருக்கு அரைக்கட்டும், சத்தியம் அவருக்கு இடைக்கச்சையுமாயிருக்கும்.

ஏரே 23:5 இதோ, நாட்கள் வருமென்று கர்த்தர் சொல்லுகிறார், அப்பொழுது தாவீதுக்கு ஒரு நீதியுள்ள கிளையை எழும்பப்பண்ணுவேன்; அவர் ராஜாவாயிருந்து, ஞானமாய் ராஜரிகம்பண்ணி, பூமியிலே நியாயத்தையும் நீதியையும் நடப்பிப்பார்.

மீகா 5:2 எப்பிராத்தா என்னப்பட்ட பெத்லெகேமே, நீ யூதேயாவிலுள்ள ஆயிரங்களுக்குள்ளே சிறியதாயிருந்தும், இஸ்ரவேலை ஆளப்போகிறவர் உன்னிடத்திலிருந்து புறப்பட்டு என்னிடத்தில் வருவார்; அவருடைய புறப்படுதல் அநாதிநாட்களாகிய பூர்வத்தினுடையது.

அன்று பெத்லெகேமில் பிறந்த கிறிஸ்து, இன்று நம்முள் வாழ்ந்துகொண்டிருப்பதற்காக தேவாதி தேவனுக்கே  ஸ்தோத்திரம்.

யோ 3:16 தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்பு கூர்ந்தார்.

கலா 4:19 என் சிறுபிள்ளைகளே, கிறிஸ்து உங்களிடத்தில் உருவாகுமளவும் உங்களுக்காக மறுபடியும் கர்ப்பவேதனைப்படுகிறேன்.

கலா 2:20 இனி நான் அல்ல, கிறிஸ்துவே எனக்குள் பிழைத்திருக்கிறார்; நான் இப்பொழுது மாம்சத்தில் பிழைத்திருக்கிறதோ, என்னில் அன்புகூர்ந்து எனக்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்த தேவனுடைய குமாரனைப்பற்றும் விசுவாசத்தினாலே பிழைத்திருக்கிறேன்.

அனைவருக்கும் கிறிஸ்து பிறப்பு மற்றும் புத்தாண்டு 2014 நல்வாழ்த்துக்கள்.