இயேசு பிறந்தார்

இயேசு பிறந்தார் நம் இயேசு பிறந்தார்

மண்ணான மனிதனை மகிமையில் சேர்கவே

நம் இயேசு பிறந்தார்

பரதேசியான (இவ்வுலகில்) என்னையும் பரலோகம் சேர்கவே

நம் இயேசு பிறந்தார்

உன்னதத்திலிருந்து தோன்றிய அருணோதயமாய்

நம் இயேசு பிறந்தார்

அனைவருக்கும் கிறிஸ்து பிறப்பு நல்வாழ்த்துக்கள்

எக்காலத்திலும்

 

கடந்து வந்த காலங்கள் கண்ணீரில் சென்றாலும்

நிகழ் கால நிகழ்வுகள் நெருக்குதலாய் இருந்தாலும்

எதிர் கால எதிர்பார்ப்புகள் எப்படி அமைந்தாலும்

கரம் பிடித்து வந்தோர் கடந்து சென்றாலும்,

வாழ்க்கை முடிந்து சென்றாலும்

கரம் பற்றி நிற்போர் காத்து நின்றாலும் (எனக்காய்)

நான் பற்றும் கரம் ஒன்றே

என்னை வனையும் (முக்காலமும்) கரம் அதுவன்றோ!

என்னை (தம்) உள்ளங்கரத்தில் வரைந்துள்ள கரம் அதுவன்றோ!

எக்காலமும் தாங்கும், ஏந்தும், சுமக்கும் கரம் அதுவன்றோ!

அது மட்டும் போதுமே, நான் வாழ்வேன் (நம்பிக்கையோடு)

எக்காலத்திலுமே.

“இயேசுகிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார்”. (எபி 13:8)

கிரஹாம் ஸ்டெயின்ஸ்

https://jesussoldierindia.com/wp-content/uploads/2019/06/wp-1559467990522.pdf

சிலுவை நிழலினிலே

அர்பணித்தேன் என்னை முற்றிலுமாய்

உந்தன் சிலுவை நிழலினிலே

உம் பின்செல்கிறேன்

எந்தன் சிலுவையோடு

மகிமை வரையிலே.

நீரே துணை

 

தத்தளிக்கும் என் வாழ்க்கை படகில்

கரைகாணா நடு இரவில்

மனம் பதறும் சூழ்நிலையில்

பயப்படாதே! என்றுரைத்து

தத்தளிப்பை தடுத்தகற்றி

கரை சேர்த்த என் இறைவா

உம்மை மறவேன்

நீரே துணை என்றுமே.

பரலோகம் விட்டு

 

பரலோகம் விட்டிறங்கி

பாரினில் வந்துதித்து

பாவ பேயை அழித்து (சிலுவைதனில்)

பாவி எனை அழைத்து

பாவம் தனை பிரித்து

ஜோதி தனை அளித்து (என்னுள்ளத்தில்)

சேர்த்து எனை அணைத்து

பரலோகம் சென்றீரே

pdf வடிவில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

அழகிய சிந்தனைகள்#2

1. நீ பேசுவதை மனிதர் கேட்க வேண்டுமானால்

தேவன் பேசுவதை நீ முதலாவது கேட்கவேண்டும்.

2. மனிதர் முன் நிமிர்ந்து நிற்க வேண்டுமானால்

தேவன் முன்பாக முழங்காலில் நிற்க வேண்டும்.

3. விண்ணில் மண்ணுயிரை தேடும் அறிவியல்

மண்ணில் வந்த விண்ணவரை தேட மறந்ததேன்!