நீரே துணை

 

தத்தளிக்கும் என் வாழ்க்கை படகில்

கரைகாணா நடு இரவில்

மனம் பதறும் சூழ்நிலையில்

பயப்படாதே! என்றுரைத்து

தத்தளிப்பை தடுத்தகற்றி

கரை சேர்த்த என் இறைவா

உம்மை மறவேன்

நீரே துணை என்றுமே.

அழகிய சிந்தனைகள்#2

1. நீ பேசுவதை மனிதர் கேட்க வேண்டுமானால்

தேவன் பேசுவதை நீ முதலாவது கேட்கவேண்டும்.

2. மனிதர் முன் நிமிர்ந்து நிற்க வேண்டுமானால்

தேவன் முன்பாக முழங்காலில் நிற்க வேண்டும்.

3. விண்ணில் மண்ணுயிரை தேடும் அறிவியல்

மண்ணில் வந்த விண்ணவரை தேட மறந்ததேன்!