காலடி தெரியாமல் போனாலும் கர்த்தர் என் முன்னே உண்டு

காலடி தெரியாமல் போனாலும் கர்த்தர் என் முன்னே உண்டு என்னும் இத்தியானம் ஆண்டவர் என் வாழ்வில் நடந்த ஒரு சிறு சம்பவத்தின் மூலம், நம் வாழ்வின் ஒவ்வொரு காரியத்திலும், நம் தகப்பனாய் இருந்து கரம் பிடித்து, நம்மை எவ்வாறாக நடத்தி செல்கிறார் என்பதை எனக்கு உணர்த்தினார், அதைப் பற்றி இப்பதிவு  தியானிக்கிறது. 

1.  pdf வடிவில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

2. மற்றொரு வடிவில்

தேவ அன்பு

8b7927e484b2f24895b2d14fbd69ac99

தேவ அன்பு என்னும் இத்தியானம் தேவன் எப்படியான அன்பை நம்மிடத்தில் எதிர்பார்க்கிறார், அவர் நம் மீது எவ்வாறு அன்பு கூறுகிறார் என்பதைப் பற்றி தியானிக்கிறது.   

1.  pdf வடிவில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

2. மற்றொரு வடிவில்:

சிந்தனை துளிகள்: துளி – 2

பஸ்கா பண்டிகைக்கு முன்னே, இயேசு இவ்வுலகத்தைவிட்டுப் பிதாவினிடத்திற்குப் போகும்படியான தம்முடைய வேளை வந்ததென்று அறிந்து, தாம் இவ்வுலகத்திலிருக்கிற தம்முடையவர்களிடத்தில் அன்புவைத்தபடியே, முடிவுபரியந்தமும் அவர்களிடத்தில் அன்புவைத்தார் (யோ 13:1) .

முடிவுபரியந்தமும் நம்மிடத்தில் அன்புகூருகிற ஒருவருண்டானால், அவர் நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து மட்டுமே.  ஆம், அதே நேரத்தில் நம்மிடமிருந்து அவர் எதிர்பார்பதும் அந்த அன்பையே.  தம்மை மறுதலித்த பேதுருவிடம் கூட நீ என்னிடத்தில் அன்பாயிருக்கிறாயா என்றே கேட்டார் நம் ஆண்டவர் (யோ 21:15-17).  பிதாவாகிய தேவன் உலகத்தில் அன்புகூர்ந்தபடியினால், தமக்கு அன்பான தமது ஒரே பேறான குமாரனையே இவ்வுலக மக்களுக்காக தந்தருளினார் (யோ 3:16).  எனவே. அன்புகூருதல் இருவழி செயலாகும்.  ஒரு வேளை நாம் நமது அன்புகூருதலில் குறைந்தாலும், பிதாவாகிய தேவனுடைய அன்பும், குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் அன்பும் என்றும் மாறாதது.  மனம் திரும்பிய மைந்தனைப்போல் நாம் எப்பொழுது திரும்பி வருவோம் என்று நம் இருதய வாசற்படியில் நின்று தட்டுகிற அன்பாகும் (வெளி 3:20).  ஏனெனில் (கிறிஸ்துவின்) அன்பே பெரியது (1 கொ 13: 13). மேலும், “உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்துமாவோடும், உன் முழு மனதோடும், உன் முழுப் பலத்தோடும் அன்புகூருவாயாக என்பதே பிரதான கற்பனை. இதற்கு ஒப்பாயிருக்கிற இரண்டாம் கற்பனை என்னவென்றால்: உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோல் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்பதே; இவைகளிலும் பெரிய கற்பனை வேறொன்றுமில்லை” (மாற்கு 12:30,31), ஆமென்.