பொல்லாத இருதயம்

dreamstime_m_70481329

பொல்லாத இருதயம் என்னும் இத்தியானம் மனிதனுடைய இருதயம் எப்படிப்பட்ட பொல்லாததாய் காணப்படுகிறது. அதன் கிரியைகள் எவ்வாறு திருச்சபையை, தனி மனிதனை, சமுதாயத்தை பாதிக்கிறது என்பதைப் பற்றி தியானிக்கிறது.   

1.  pdf வடிவில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

2. மற்றொரு வடிவில்:

தேவ அன்பு

8b7927e484b2f24895b2d14fbd69ac99

தேவ அன்பு என்னும் இத்தியானம் தேவன் எப்படியான அன்பை நம்மிடத்தில் எதிர்பார்க்கிறார், அவர் நம் மீது எவ்வாறு அன்பு கூறுகிறார் என்பதைப் பற்றி தியானிக்கிறது.   

1.  pdf வடிவில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

2. மற்றொரு வடிவில்:

எல்லாவற்றையும் விட்டு

எல்லாவற்றையும் விட்டு  என்னும் இத்தியானம்  ஆண்டவர் அப்போஸ்தலர்களை அழைத்த உன்னதமான அழைப்பிற்கு அவர்கள் எவ்வாறு கீழ்படிந்து மேன்மை அடைந்தனர் என்பதை பற்றி தியானிக்கிறது.

1.  pdf வடிவில் படிக்க  இங்கே கிளிக் செய்யவும்.

2.  புத்தக வடிவில் படிக்க https://www.flipsnack.com/9696A7BA9F7/–funl6p99d.html (லிங்க்கை) கிளிக் செய்யவும்.

3. மற்றொரு வடிவில்:

உலகத்தாரல்ல

உலகத்தாரல்ல என்னும் இத்தியானம்  இவ்வுலகத்தில் நாம் வாழ்ந்தாலும் நம் வாழ்வின் நோக்கம் உலகத்தில் உள்ள காரியங்களுக்குரியதாய் இராமல் பரம தேவனின் சித்தத்தை நிறைவேற்றுவதாகவே உள்ளது என்ற சத்தியத்தை பற்றி தியானிக்கிறது.

1.  pdf வடிவில் படிக்க  இங்கே கிளிக்  செய்யவும்.

2.  புத்தக வடிவில் படிக்க https://www.flipsnack.com/9696A7BA9F7/fdnib98jv.html (லிங்க்கை) கிளிக் செய்யவும்.

3. மற்றொரு வடிவில்:

துன்ப நேரத்தில்

 

துன்ப நேரத்தில் என்னும் இத்தியானம்  இவ்வுலகத்தில் வாழ்வில் சில துன்பமான சூழ்நிலைகளை நாம் கடந்து செல்கையில், அத்துன்பத்தின் ஊடாக மனிதர்கள் மற்றும் பிற வாழ்க்கையின் ஆதாரங்கள் அனைத்தும் நம்மை கைவிட்ட நிலையில், தேவன் மாத்திரமே நம்மை தேடி வந்து ஆறுதல் படுத்தி நம்மை அத்துன்பத்தில் இருந்து விடுவிக்க வல்லவர் என்பதையும், அதற்கு நாம் எப்படி பட்டவர்களாய் இருக்க வேண்டும் என்பதை பற்றியும் தியானிக்கிறது.

1.  pdf வடிவில் படிக்க  இங்கே கிளிக்  செய்யவும்.

2.  புத்தக வடிவில் படிக்க https://www.flipsnack.com/9696A7BA9F7/fdh8gf5nr.html (லிங்க்கை) கிளிக் செய்யவும்.

3. மற்றொரு வடிவில்:

சிந்தனை துளிகள்: துளி – 2

பஸ்கா பண்டிகைக்கு முன்னே, இயேசு இவ்வுலகத்தைவிட்டுப் பிதாவினிடத்திற்குப் போகும்படியான தம்முடைய வேளை வந்ததென்று அறிந்து, தாம் இவ்வுலகத்திலிருக்கிற தம்முடையவர்களிடத்தில் அன்புவைத்தபடியே, முடிவுபரியந்தமும் அவர்களிடத்தில் அன்புவைத்தார் (யோ 13:1) .

முடிவுபரியந்தமும் நம்மிடத்தில் அன்புகூருகிற ஒருவருண்டானால், அவர் நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து மட்டுமே.  ஆம், அதே நேரத்தில் நம்மிடமிருந்து அவர் எதிர்பார்பதும் அந்த அன்பையே.  தம்மை மறுதலித்த பேதுருவிடம் கூட நீ என்னிடத்தில் அன்பாயிருக்கிறாயா என்றே கேட்டார் நம் ஆண்டவர் (யோ 21:15-17).  பிதாவாகிய தேவன் உலகத்தில் அன்புகூர்ந்தபடியினால், தமக்கு அன்பான தமது ஒரே பேறான குமாரனையே இவ்வுலக மக்களுக்காக தந்தருளினார் (யோ 3:16).  எனவே. அன்புகூருதல் இருவழி செயலாகும்.  ஒரு வேளை நாம் நமது அன்புகூருதலில் குறைந்தாலும், பிதாவாகிய தேவனுடைய அன்பும், குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் அன்பும் என்றும் மாறாதது.  மனம் திரும்பிய மைந்தனைப்போல் நாம் எப்பொழுது திரும்பி வருவோம் என்று நம் இருதய வாசற்படியில் நின்று தட்டுகிற அன்பாகும் (வெளி 3:20).  ஏனெனில் (கிறிஸ்துவின்) அன்பே பெரியது (1 கொ 13: 13). மேலும், “உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்துமாவோடும், உன் முழு மனதோடும், உன் முழுப் பலத்தோடும் அன்புகூருவாயாக என்பதே பிரதான கற்பனை. இதற்கு ஒப்பாயிருக்கிற இரண்டாம் கற்பனை என்னவென்றால்: உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோல் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்பதே; இவைகளிலும் பெரிய கற்பனை வேறொன்றுமில்லை” (மாற்கு 12:30,31), ஆமென்.