கிருபையை பற்றிக் கொண்டவர்கள் – பாகம் 4 – மனந்திரும்பின கள்ளன்

126 thief-on-the-cross

கிருபையை பற்றிக்கொண்டவர்கள் – பாகம் 4 (மனந்திரும்பின கள்ளன்) என்னும் இத்தியானம் ஆண்டவர் எவ்வாறு தமது கிருபையை, பல்வேறு நேரங்களில், பலவிதங்களில், சில தனிப்பட்ட மக்களின் வாழ்க்கையில் அருளும் பொழுது, அதற்கு அவர்கள் கீழ்ப்படிந்து எவ்வாறு இரட்சிப்பை, மீட்பை, நித்திய ஜீவனை பெற்றார்கள் என்பதை நாம் கடந்த மூன்று பாகங்களில் கண்டோம். இந்த நான்காம் பாகத்திலும், மிகவும் முக்கியமான ஒரு தருணத்திலே, ஆண்டவர் சிலுவையில் தமது ரத்தத்தை, அனைத்து மக்களுக்காகவும் சிந்துகிற வேளையில், அவருடைய கிருபையை உணர்ந்து, அதை பற்றிப் பிடித்துக்கொண்டவன் தான், சிலுவையில் அவரோடு கூட அறையப்பட்ட கள்ளரில் ஒருவன். அவனைப்பற்றி இப்பதிவில் தியானிப்போம். 

1.  PDF வடிவில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

2. மற்றொரு வடிவில்

கிருபையை பற்றிக் கொண்டவர்கள் – பாகம் 3 – சமாரிய ஸ்திரீ

கிருபையை பற்றிக்கொண்டவர்கள் – பாகம் 3 (சமாரிய ஸ்திரீ) என்னும் இத்தியானம் இதற்கு முன்பு கிருபையைப் பற்றிக் கொண்டவர்கள் பாகம் இரண்டில், நாம் எவ்வாறு ரோம சிறைச்சாலைக்காரன் பவுலின் மூலமாய் தேவ கிருபையைப் பெற்று இரட்சிக்கப்பட்டான் என்பதை கண்டோம். அதே வேளையில் முதலாம் பாகத்தில் ஆண்டவர் எப்படிப்பட்டவரோ என்று பார்க்க வந்த சகேயுவை, ஆண்டவர் எப்படி இரட்சித்தார் என்பதையும் கண்டோம். இப்பாகம் மூன்றில், சகேயுவை போல் ஆண்டவரை பற்றி எதுவும் கேள்விப்படாமல், அன்றாட வேலையான கிணற்றில் தண்ணீர் எடுக்க வந்த சமாரிய ஸ்திரீயை ஆண்டவர் சந்தித்து, அவளுடன் நேர்முகமாக உரையாடி, ஆண்டவர் அவளுக்கு அருளி இருக்கும் தேவ கிருபையை, ஈவை அவளுக்கு விளங்க காட்டி அவளை ரட்சித்தார். அவள் இரட்சிக்கப்பட்டது மட்டுமல்லாமல், ஊரில் உள்ள மக்கள் அனைவருக்கும் ஆண்டவரை பற்றி கூறி, அவர்களும் ஆண்டவரே, கிறிஸ்துவாகிய உலக ரட்சகர் என்று அறிந்து விசுவாசிக்கும்படியாய் செய்தாள்.  இதைப்பற்றி இப்பதிவில் தியானிப்போம். 

1.  PDF வடிவில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

2. மற்றொரு வடிவில்

கிருபையை பற்றிக் கொண்டவர்கள் – பாகம் 2 – சிறைச்சாலைக்காரன்

PP-PaulSilasAndJailor_LJ_0067 1

கிருபையை பற்றிக்கொண்டவர்கள் – பாகம் 2 (சிறைச்சாலைக்காரன்) என்னும் இத்தியானம் இதற்கு முன்பு தியானித்த தியானங்களில், கிருபையை பற்றிக்கொண்டவர்கள் பாகம் ஒன்றில் லூக்கா 19 ஆம் அதிகாரத்தில், ஆண்டவருடைய கிருபையின் அழைப்பை பற்றி பிடித்துக்கொண்ட சகேயு, எப்படி தானும் தன் வீட்டாரும் இரட்சிக்கப்பட காரணமாய் இருந்தார் என்பதை கண்டோம். இவ்விரண்டாம் பாகத்தில் அப்போஸ்தலர் நடபடிகள் பதினாறாம் அதிகாரத்தில், அப்போஸ்தலராகிய பவுலின் மூலம் வெளிப்பட்ட தேவ கிருபையை, எவ்வாறு ரோம அரசின் சிறைச்சாலைக்காரன் பற்றி பிடித்துக் கொண்டு, அதன் மூலம் தானும் தன் வீட்டாரும் இரட்சிக்கப்பட காரணமாயிருந்தான் என்பதை தியானிப்போம். 

1.  PDF வடிவில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

2. மற்றொரு வடிவில்

கிருபையை பற்றிக் கொண்டவர்கள் – பாகம் 1 – சகேயு

zacchaeus

கிருபையை பற்றிக்கொண்டவர்கள் – பாகம் 1 (சகேயு) என்னும் இத்தியானம் இதற்கு முன்பு தியானித்த தியானங்களில், கிருபையை போக்கடித்தவர்கள் பற்றி கண்டோம். அதே வேளையில் தேவன் தங்கள் வாழ்வில் கொடுத்த ஒரு சிறு கிருபையை, அருமையாய் பயன்படுத்தி மேன்மையான காரியங்களை கண்டடைந்தவர்களும் உண்டு. அப்படிப்பட்டவர்களின் ஒருவர் தான் நாம் லூக்கா 19 ஆம் அதிகாரத்தில் காணும் சகேயு ஆகும். சகேயுவை குறித்த சம்பவம் லூக்கா 19:1-10 வசனங்களில் மிக சுருக்கமாய் கூறப்பட்டிருந்தாலும், ஆண்டவராகிய கிறிஸ்து இயேசுவிடம் அவர் பெற்றுக் கொண்டது மிக மேன்மையான ஒன்றாகும்.  அதைப் பற்றி இத்தியானம் தியானிக்கிறது. 

1.  pdf வடிவில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

2. மற்றொரு வடிவில்

தியானங்களின் தொகுப்பு புத்தக வடிவில் (மே 2024) – தற்பொழுது AMAZON, FLIP KART தளங்களில்

ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.  அனைவருக்கும் ஒரு மகிழ்ச்சியான செய்தி, இயேசுவின் வீரன் இணையதளத்தில் இது வரை (மே 2024) வெளியான அனைத்து தியானங்களின் தொகுப்பு அச்சு புத்தகமாக (PRINT BOOK) வெளிவந்துள்ளது.  தேவைப்படுவோர் கீழ்காணும் இணைய முகவரிகளில் (web links) தேவையான புத்தகங்களை ஆர்டர் (ORDER) செய்து, அதற்குரிய கட்டணத்தை செலுத்தி பெற்றுக்கொள்ளலாம்.

AMAZONhttps://www.amazon.in/dp/1637549563?ref=myi_title_dp

FLIP KARThttps://www.flipkart.com/tamil-christian-devotionals-2024/p/itmbbad36fe23665?pid=9781637549568

POTHIhttps://store.pothi.com/book/jesus-soldier-tamil-christian-devotionals-2024/

எத்தனை புத்தகங்கள் வேண்டுமானாலும் ஆர்டர் செய்து பெற்றுக்கொள்ளலாம்.

முக்கிய குறிப்பு: கட்டணத்தை செலுத்தி ஆர்டர் செய்த புத்தகங்களை அனுப்பி வைப்பது (Delivery) அச்சகத்தாரின் பொறுப்பே அன்றி, இயேசுவின் வீரன் இணையத்தளம் அதற்கு எவ்விதத்திலும் பொறுப்பேற்காது.

இயேசுவின் வீரன் – தியானங்களின் தொகுப்பு – மே 2024 அச்சு (PRINT) வடிவில்

ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.  அனைவருக்கும் ஒரு மகிழ்ச்சியான செய்தி, இயேசுவின் வீரன் இணையதளத்தில் இது வரை (மே 2024) வெளியான அனைத்து தியானங்களின் தொகுப்பு அச்சு புத்தகமாக (PRINT BOOK) வெளிவந்துள்ளது. தேவைப்படுவோர் கீழ்காணும் இணைய முகவரியில் (web link) தேவையான புத்தகங்களை ஆர்டர் (ORDER) செய்து, அதற்குரிய கட்டணத்தை செலுத்தி பெற்றுக்கொள்ளலாம்.

https://store.pothi.com/book/jesus-soldier-tamil-christian-devotionals-2024/

எத்தனை புத்தகங்கள் வேண்டுமானாலும் ஆர்டர் செய்து பெற்றுக்கொள்ளலாம்.

முக்கிய குறிப்பு: கட்டணத்தை செலுத்தி ஆர்டர் செய்த புத்தகங்களை அனுப்பி வைப்பது (Delivery) அச்சகத்தாரின் பொறுப்பே அன்றி, இயேசுவின் வீரன் இணையத்தளம் அதற்கு எவ்விதத்திலும் பொறுப்பேற்காது.

தியானங்களின் தொகுப்பு (மே 2024)

நமது தளத்தில் இதுவரை வெளியிடப்பட்ட அனைத்து தியானங்களும் (மே 2024 வரை) ஒரே பதிவாகதியானிப்பதற்கு வசதியாக கீழ்கண்ட பல்வேறு வடிவங்களில் வெளியிடப்பட்டுள்ளது. இம்மட்டும் வழிநடத்தி வந்த தேவனுக்கே மகிமை உண்டாவதாக.

1. pdf வடிவில் படிக்க இங்கே கிளிக்  செய்யவும்.

2. மற்றொரு வடிவில்: