
கெத்செமனே தோட்டத்தில் உம் துயர சத்தம் கேட்டேன்
என் துன்ப சத்தங்கள் அடங்கி போக கண்டேன்
உம்மை ஆற தழுவிய நயவஞ்சகன் செயல் கண்டேன்
என்னை ஆறா துயரில் ஆழ்த்திய நயவஞ்சகர்கள் செயல் மறந்தேன்
உம்மை விட்டு ஓடிப்போனோர் நிலை கண்டேன்
என்னை மறந்தோர் நிலை எண்ணி மறந்தேன்
சிலுவையில் அறைய எழும் கூச்சல் கேட்டேன்
என்னை எதிர்த்த குரல்கள், மன ஒலி கேட்டேன்
நீதிமான் என்று அறிந்தும், கை கழுவிய நிலை கண்டேன்
என்னை கைவிட்டோரின் முன், என் நீதி ஏதுமில்லை என்றறிந்தேன்
பிதாவே இவர்களுக்கு மன்னியும், என்ற அன்பின் மொழி கேட்டேன், சிலுவையினிலே!
என்னையும் மன்னித்த மாதயவை எண்ணி நின்றேன், சிலுவையண்டையிலே!
அனைவருக்கும் அன்பின் புனித வெள்ளி 2024 வாழ்த்துக்கள்.


