வாழ்க்கை படகு

கடல் என்னும் இவ்வுலகில், வாழ்க்கை என்னும் என் படகில் அநேகரோடு பயணித்து கொண்டிருந்தேன். திடீரென்று பலத்த புயல் விசீயது, இருள் சூழ்ந்தது, எந்த திசையிலும் எந்த கரையும் தென்படவில்லை. ஐயோ! ஆண்டவரே புயல் விசூகிறதே (நாச மோசங்கள்) என்றேன், ஆண்டவர் அமைதியாய் இருந்தார். எல்லாம் இருளாய் (பயங்கரங்கள்) இருக்கிறதே என்றேன், ஆண்டவர் அமைதியாய் இருந்தார். எந்த கரையும் (வழியும்) தென்படவில்லையே என்றேன், ஆண்டவர் அமைதியாய் இருந்தார். எனக்கு அருமையானவர்களை காப்பாற்றும் என்றேன், ஆண்டவர் அமைதியாய் இருந்தார். மற்ற மனிதர்கள் கடலில் (உலகத்தில்) குதித்து ஓடிவிட்டனரே என்றேன், ஆண்டவர் அமைதியாய் அது அவர்கள் வழி என்றார்.

என்னை வேறு படகில் மாற்றுமே என்றேன், ஆண்டவர் அமைதியாய் இதுதான் உன் படகு (வாழ்க்கை) என்றார். என் படகு (வாழ்க்கை) மூழ்கபோகிறது, நான் மடிய போகிறேன் என்றேன். ஆண்டவர், நானும் உன்னோடு உன் படகில் இருப்பதை ஏன் மறந்தாய் என்றார். நானோ என்னால் இதை எதிர்கொள்ள (தாங்க) முடியவில்லை என்றேன். ஆண்டவர், நான் தான் படகை ஓட்டுகிறேன், பயப்படாதே என்றார். எனக்கு அருமையானவர்கள் படும் வேதனைகளை கண்டேன். அவர்களை அணைத்து கொண்டு, ஆண்டவரண்டையில் (அவர் பாதத்தில்) உட்கார்ந்தேன். சிறிது நேரத்தில் ஒளி வந்தது, இருள் மறைந்தது, தென்றல் விசீயது, புயல் அடங்கினது. ஆண்டவர் என் படகை நித்திய ஜீவ கரையில் சேர்த்தார்.

எனக்கு அருமையானவர்களை முதலாவது கரையில் இறக்கினேன். மிகவும் சோர்ந்து போனேன். ஆண்டவர் தம் கரத்தை நீட்டினார். அவர் கரத்தை பற்றி கொண்டு கரையில் இறங்கினேன். தூரத்தில் கடலில் குதித்தவர்கள் மாண்டு போயிருப்பதை கண்டேன். ஆண்டவரே ஏன் இதெல்லாம் நடந்தது என்றேன், ஆண்டவர் அமைதியாய் என்னை பின்பற்றி வா என்றார். இந்த போராட்டத்தில் (வாழ்க்கை படகில்) இருந்து என்னை காப்பாற்ற ஆண்டவர் பட்ட காயங்களை அப்பொழுதுதான் கண்டேன். கண்ணீரோடு அவர் பின் எனக்கு அருமையானவர்களோடு சென்றேன். பரலோக தேசத்தில் என் மோட்ச வீட்டை நோக்கி.

1. PDF வடிவில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

2. ஆடியோ வடிவில்:

கர்த்தரோடிருத்தல் – பாகம் 1 (mp3 வடிவில் on sound cloud)

கர்த்தரோடிருத்தல் என்னும் இத்தியானம் யோசேப்பின் வாழ்க்கையிலிருந்து வேதம் தரும் சத்தியங்களை ஓலி வடிவில் (Audio – sound cloud) கொண்டுள்ளது.  தேவ செய்தியை கேட்க பின்வரும் லிங்கை கிளிக் செய்யவும்.

Direct link: https://soundcloud.com/jesussoldierindia/kartharoderuthal-part-1-living

கர்த்தரோடிருத்தல் – பாகம் 1

கர்த்தரோடிருத்தல் என்னும் இத்தியானம் யோசேப்பின் வாழ்க்கையிலிருந்து வேதம் தரும் சத்தியங்களை ஓலி வடிவில் (Audio – you tube) கொண்டுள்ளது.  தேவ செய்தியை கேட்க பின்வரும் லிங்கை கிளிக் செய்யவும்.

http://youtu.be/C3VyDj0O44o

கர்த்தருடைய வழிகள்

இந்த தியானத்தை pdf வடிவில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்.
குறிப்பு: தியானத்தின் பக்க அளவு அதிகமானதாலும், download செய்துக் கொள்ள வசதியாகவும் pdf வடிவில் தரப்பட்டுள்ளது.

கர்த்தருடைய கரம்

கர்த்தருடைய கரம் இஸ்ரவேல் மக்களை எகிப்தில் இருந்து கானானுக்கு நடத்தி சென்றது. கர்த்தருடைய கரத்தினால் நடத்தபடுவது என்பது தேவனுடைய முழு ஆளுகைக்குள் நாம் இருப்பதை குறிக்கிறது. ஆம், கர்த்தருடைய கரத்தினால் நடத்தப்படும் பொழுது நமது சுயசித்தத்திற்கு அங்கு இடமில்லை. நம்முடைய வழிகளுக்கும், எண்ணங்களுக்கும் மேலாக தேவனுடைய வழிகளும், எண்ணங்களும் (சித்தங்களும்) நம்முடைய வாழ்வில் நிறைவேறும். இஸ்ரவேல் மக்களை ஆண்டவர் நடத்தி சென்ற  பாதையை அவர்களால் விளங்கி கொள்ள முடியவில்லை.  சிவந்த சமுத்திரம் போன்ற தடைகளும், மாரா போன்ற கசப்புகளும், அவர்கள் பாதையில் வந்தபொழுது அவர்களால் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லைஆனால் தேவனே அவர்களை அவ்வழியில் கரம்பிடித்து நடத்தி சென்றார். மேலும் எதிரிகள் அவர்களை எதிர்த்த போதும், அவர்கள் விரும்பின இறைச்சி கிடைக்காத போதும், அவர்கள் செல்கின்ற பாதை தேவனால் வழிநடத்தப்படுகின்ற பாதை என்பதை அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லைஎகிப்தில் தொடங்கி அவர்கள் வழிபிராயணத்தில் எத்தனையோ அற்புதங்களை தேவன் மோசே மூலமாக செய்தபொழுதும், அவர்கள் தேவனுக்கும், மோசேக்கும் கீழ்படியவில்லைஅதைக் காட்டிலும் தாங்கள் விட்டு வந்த எகிப்திற்கே திரும்ப வேண்டும் என்பது அவர்கள் எண்ணமாயிருந்தது.

நம்முடைய வாழ்க்கை பயணத்திலும், கர்த்தருடைய கரம் நம்மோடிருக்கிறது என்பதை நாம் அறிந்திருக்கிறோம்பாவத்தில் இருந்து நம்மை மீட்டெடுத்து நித்திய ஜீவவாழ்வை நோக்கி தேவன் நம்மை நடத்திக் கொண்டருக்கிறார் என்பதையும் நாம் அறிவோம்தேவன் வனாந்திரத்தில் இஸ்ரவேல் மக்களை போஷித்து, பாதுகாத்து வந்தது போல நம்மையும் இவ்வுலக வாழ்வில் போஷித்து, பாதுகாத்து வருகிறார்ஆண்டவர் இஸ்ரவேல் மக்களை போஷித்து காபாற்றினது வனாந்திரத்தில் வாழ்வதற்காக அல்ல, வாக்குத்தத்த தேசமாகிய கானானை சென்று அடைவதற்காகதான்நம்மையும் தேவன் இவ்வுலகில் சகல நன்மைகளையும் கொடுத்து காப்பாற்றுவது பரம கானானாகிய பரலோகத்திற்கு வழிநடத்தி செல்வதற்கேஇப்படிப்பட்ட ஓர் உன்னதமான வாழ்க்கை பயணத்தில் நம்மைதேவன் வழிநடத்தி வருகிற வேளையில் நமக்கும் சிவந்த சமுத்திரம் போன்ற தடைகளும், மாரா போன்ற கசப்பான அனுபவங்களும் ஏற்படுகிறது.

ஆனால் நாம் கர்த்தருடைய கரத்தை உறுதியாய் பிடித்துக்கொள்வோமானால், தேவன் நிச்சயமாக இப்படிப்பட்ட ஒவ்வொரு சூழ்நிலையிலும் நம்மை வழுவாது கரம்பிடித்து நடத்திசெல்வார்ஏனெனில்நான் உன்னை விட்டுவிலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை (எபி 13:5) என்று அவர் சொல்லியிருக்கிறாரேமேலும் இஸ்ரவேல் மக்களை போல நாமும் சில காரியங்களை இச்சித்து பாதை விலகி போகும் பொழுதும், நம்மை கரம்பிடித்துவழி இதுவே இதிலே நடவுங்கள் (ஏசா 30:21) என்று வழி நடத்துகிறவரும் அவரே. பிரதான மேய்ப்பராகிய அவர் பின்னே அவர் சத்தத்துக்கு செவிக்கொடுத்து செல்வோமானால் நாம் உள்ளும் புறம்பும் சென்று மேய்ச்சலைக் கண்டடைவோம் (யோ 10:3,9). அவர் கரத்தில் உள்ள கோலும், தடியும் நம்மை தேற்றும் (சங் 23:4).

அவரே நம்மை நீதியின் பாதையில் நடத்துகிறவர் (சங் 23:3).  “நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்த பாதையில் மரணம் இல்லை” (நீதி 12:28).  உன்னதப்பாட்டு 5:4 கூறுகிறதுஎன் நேசர் தமது கையைக் கதவுத் துவாரத்தின் வழியாய் நீட்டினார், அப்பொழுது என் உள்ளம் அவர் நிமித்தம் பொங்கினது“.  ஒரு வேளை நீங்கள் கர்த்தருடைய அன்பை அறிந்திருந்தும் அவரை விட்டு விலகி (வழி விலகி) இருப்பீர்கள் என்றால், அவருடைய கரம் உங்களை நோக்கி நீட்டப்படுகிறது, அவர் உங்களை விட்டு போகும்முன்னே அவர் கரத்தை பற்றிக்கொள்ளுங்கள். வெளிப்படுத்தல் 3:20 கூறுவது போலஇதோ, வாசற்படியிலே நின்று தட்டுகிறேன்என்று உங்கள் இதய கதவை தட்டிக்கொண்டிருப்பதும் தேவனுடைய கரமே. இப்பொழுதே அவர் கரத்தை பற்றி பிடித்துக்கொள்ளுங்கள், அவரே நம்மை நித்திய ஜீவகரையில் சேர்ப்பவர். ஆமென்