இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள் 2024

நற்கிரியைகளைக் கண்டு

129 photo

நற்கிரியைகளைக் கண்டு என்னும் இத்தியானம் தேவனைப் பற்றிய நற்செய்தியை நாம் மற்றவர்களுக்கு வாயினால் அறிவித்தாலும், நம்முடைய் நல்நடக்கையும், நற்கிரியைகளுமே மற்றவர்கள் ஆண்டவரை பற்றி அறிந்து கொள்வதற்கும், அவரை மகிமைப்படுத்துவதற்கும் காரணமாய் இருக்கிறது  என்பதைப்பற்றி தியானிக்கிறது. 

1.  PDF வடிவில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

2. மற்றொரு வடிவில்

தேவனிடத்தில் ஐசுவரியம்

தேவனிடத்தில் ஐசுவரியம் என்னும் இத்தியானம் ஆண்டவர் பார்வையில் எது நாம் பெற்றுக்கொள்ள வேண்டிய ஐசுவரியமாய் உள்ளது. அதை நாம் எவ்வாறு பயன்படுத்த வேண்டும்.  மேலும் இவ்வுலக ஐசுவரியத்தையும் தேவன் நமக்கு தரும் பொழுது, அதையும் நாம் எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதைப்பற்றி தியானிக்கிறது. 

1.  PDF வடிவில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

2. மற்றொரு வடிவில்

ஏதாகிலும் செய்யக்கூடுமானால்

127 photo

ஏதாகிலும் செய்யக்கூடுமானால் என்னும் இத்தியானம் தகப்பன் ஒருவன்  பிசாசினால் பீடிக்கப்பட்டிருந்த தன் மகனை, அவர் ஏதாகிலும் செய்வார் என்ற நம்பிக்கையோடு ஆண்டவரிடத்தில் கொண்டுவந்த பொழுது, அற்புதமான விடுதலையை பெற்றுக்கொண்டான். அவனைப்பற்றி இப்பதிவில் தியானிப்போம். 

1.  PDF வடிவில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

2. மற்றொரு வடிவில்

கிருபையை பற்றிக் கொண்டவர்கள் – பாகம் 4 – மனந்திரும்பின கள்ளன்

126 thief-on-the-cross

கிருபையை பற்றிக்கொண்டவர்கள் – பாகம் 4 (மனந்திரும்பின கள்ளன்) என்னும் இத்தியானம் ஆண்டவர் எவ்வாறு தமது கிருபையை, பல்வேறு நேரங்களில், பலவிதங்களில், சில தனிப்பட்ட மக்களின் வாழ்க்கையில் அருளும் பொழுது, அதற்கு அவர்கள் கீழ்ப்படிந்து எவ்வாறு இரட்சிப்பை, மீட்பை, நித்திய ஜீவனை பெற்றார்கள் என்பதை நாம் கடந்த மூன்று பாகங்களில் கண்டோம். இந்த நான்காம் பாகத்திலும், மிகவும் முக்கியமான ஒரு தருணத்திலே, ஆண்டவர் சிலுவையில் தமது ரத்தத்தை, அனைத்து மக்களுக்காகவும் சிந்துகிற வேளையில், அவருடைய கிருபையை உணர்ந்து, அதை பற்றிப் பிடித்துக்கொண்டவன் தான், சிலுவையில் அவரோடு கூட அறையப்பட்ட கள்ளரில் ஒருவன். அவனைப்பற்றி இப்பதிவில் தியானிப்போம். 

1.  PDF வடிவில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

2. மற்றொரு வடிவில்

கிருபையை பற்றிக் கொண்டவர்கள் – பாகம் 3 – சமாரிய ஸ்திரீ

கிருபையை பற்றிக்கொண்டவர்கள் – பாகம் 3 (சமாரிய ஸ்திரீ) என்னும் இத்தியானம் இதற்கு முன்பு கிருபையைப் பற்றிக் கொண்டவர்கள் பாகம் இரண்டில், நாம் எவ்வாறு ரோம சிறைச்சாலைக்காரன் பவுலின் மூலமாய் தேவ கிருபையைப் பெற்று இரட்சிக்கப்பட்டான் என்பதை கண்டோம். அதே வேளையில் முதலாம் பாகத்தில் ஆண்டவர் எப்படிப்பட்டவரோ என்று பார்க்க வந்த சகேயுவை, ஆண்டவர் எப்படி இரட்சித்தார் என்பதையும் கண்டோம். இப்பாகம் மூன்றில், சகேயுவை போல் ஆண்டவரை பற்றி எதுவும் கேள்விப்படாமல், அன்றாட வேலையான கிணற்றில் தண்ணீர் எடுக்க வந்த சமாரிய ஸ்திரீயை ஆண்டவர் சந்தித்து, அவளுடன் நேர்முகமாக உரையாடி, ஆண்டவர் அவளுக்கு அருளி இருக்கும் தேவ கிருபையை, ஈவை அவளுக்கு விளங்க காட்டி அவளை ரட்சித்தார். அவள் இரட்சிக்கப்பட்டது மட்டுமல்லாமல், ஊரில் உள்ள மக்கள் அனைவருக்கும் ஆண்டவரை பற்றி கூறி, அவர்களும் ஆண்டவரே, கிறிஸ்துவாகிய உலக ரட்சகர் என்று அறிந்து விசுவாசிக்கும்படியாய் செய்தாள்.  இதைப்பற்றி இப்பதிவில் தியானிப்போம். 

1.  PDF வடிவில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

2. மற்றொரு வடிவில்

கிருபையை பற்றிக் கொண்டவர்கள் – பாகம் 2 – சிறைச்சாலைக்காரன்

PP-PaulSilasAndJailor_LJ_0067 1

கிருபையை பற்றிக்கொண்டவர்கள் – பாகம் 2 (சிறைச்சாலைக்காரன்) என்னும் இத்தியானம் இதற்கு முன்பு தியானித்த தியானங்களில், கிருபையை பற்றிக்கொண்டவர்கள் பாகம் ஒன்றில் லூக்கா 19 ஆம் அதிகாரத்தில், ஆண்டவருடைய கிருபையின் அழைப்பை பற்றி பிடித்துக்கொண்ட சகேயு, எப்படி தானும் தன் வீட்டாரும் இரட்சிக்கப்பட காரணமாய் இருந்தார் என்பதை கண்டோம். இவ்விரண்டாம் பாகத்தில் அப்போஸ்தலர் நடபடிகள் பதினாறாம் அதிகாரத்தில், அப்போஸ்தலராகிய பவுலின் மூலம் வெளிப்பட்ட தேவ கிருபையை, எவ்வாறு ரோம அரசின் சிறைச்சாலைக்காரன் பற்றி பிடித்துக் கொண்டு, அதன் மூலம் தானும் தன் வீட்டாரும் இரட்சிக்கப்பட காரணமாயிருந்தான் என்பதை தியானிப்போம். 

1.  PDF வடிவில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

2. மற்றொரு வடிவில்